மின் கம்பிகள் பிரதான வீதியில் அறுந்து விழுந்ததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு


க.கிஷாந்தன்-
ட்டன் மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிட்டவல பகுதியில் 08.08.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் மூன்று மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் சரிந்து விழுந்ததால் மின் கம்பமும், மின் கம்பியும் அறுந்து விழுந்ததன் காரணமாக அப்பிரதேசத்திற்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மரத்தை வெட்டி அகற்றியுள்ளதோடு, மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் பிரதான வீதியில் கிடப்பதனால் அவ்வழியில் ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.
போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக கொழும்பு மற்றும் அவிசாவளை செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -