உண்மையைக் கண்டறிய நீதியான விசாரனைக்கு ஒத்துழையுங்கள்_பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
ண்மையைக் கண்டறிய நீதியான விசாரனைக்கு ஒத்துழைத்து உயர்ந்த சபைக்கு அறிக்கை மூலம் சமர்ப்பியுங்கள் .
என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (07) புதன் கிழமை மாலை முன்னால் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்
மட்டக்களப்பு கெம்பஸ் முன்னால் அரசாங்கம் ஊடாக 2014 ம் ஆண்டில் சகல விதமான திணைக்களங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடனுமே கட்டி முடிக்கப்பட்டது. ஹிஸ்புல்லா முஸ்லிம் என்ற காரணத்துக்காக அவர் மீது வீண் பழி சுமத்தி அப்பட்டமான பழிகளை அள்ளிப் போடாதீர்கள் .
இந்த உயர்ந்த சபையில் இரு குழுக்களை நியமித்து நீதியான விசாரனை நடாத்துங்கள் சகல ஆதாரங்களையும் அன்றைய காலம் முதல் இன்று வரையில் வங்கி நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகளையும் தொடர்புகளையும் கொண்டுள்ள முன்னால் ஆளுனர் ஹிஸ்புல்லாவை பழி சுமத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது .

உண்மை நிலையை கண்டறிந்து உலகுக்கு அறிவியுங்கள் .
இந்த பல்கலைக்கழக விவகாரத்தில் அடிப்படை வாதிகள்,ஷரிஆ என்பன முன்னெடுக்கப்படவில்லை உயர்தரமான பாடநெறிகளான சிவில் என்ஜினியரிங்,இலக்ட்றிக் என்ஜியரின்,தொடர்பாடல் தொழில் நுட்பம் உட்பட எட்டு வகையான முக்கிய பாடநெறிகளே இங்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது மாறாக அங்கு வேறு வகையான பிழையான அடிப்படைவாத வழிகாட்டல்கள் நடைபெறவில்லை.
பிழையாக விளங்கிக் கொண்டு இந்த சபையில் இருக்கும் சிலர் இது தொடர்பில் பிழை இருப்பின் 225 உறுப்பினர்களுக்கும் உண்மை நிலையை கண்டறிய ஒத்துழையுங்கள் வருடாந்தம் கா.பொ.தா உயர்தரப் பரீட்சைக்கு 1 இலட்சத்து 98 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகிறார்கள் இதில் 28 ஆயிரம் மாணவர்களுக்கே அரச உள்வாரி பல்கழைக்கழக வாய்ப்பு கிட்டுகிறது 17 ஆயிரம் மாணவர்கள் வீதியில் அலைந்து திரிவதை தடுக்கவே இவ்வாறான நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பங்கம் வகிக்கக் கூடிய பாடநெறிகளை இவர்களுக்கு நடாத்த திட்டமிடப்பட்டது இதை விடுத்து முஸ்லிம் என்கிற காரணத்துக்காக பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புபடுத்தி வேறு திசைக்கு திருப்ப முனைவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் அடைந்த துன்பங்களை முஸ்லிம் சமூகம் இணைந்து துயர் துடைக்கிறோம் மனவேதனை அடைகிறோம் இஸ்லாமிய மார்க்கம் பயங்கரவாதத்தை விரும்புவதில்லை உலகுக்கு வழி காட்ட வந்த அழகி மார்க்கம் .உயர்ந்த சபையில் சபாநாயகருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகிறேன் உண்மையை நீதியை நிலை நாட்ட கண்டறிய உயர் சபையில் குழுக்களை அமைத்து விசாரியுங்கள் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -