இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்துக்கு 50 இலட்சம் ரூபாய் நிதி

ரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் கல்குடா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,
அதன் ஒரு அங்கமாக தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின்
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தின் மூன்று மாடிக் கட்டட வேலைகளை பூரணப்படுத்துவதற்காக 50இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
வாழைச்சேனை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் இம்தியாஸ் உட்பட கட்சியின் கல்குடா பிரதேச முக்கியஸ்த்தர்கள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் பாடசாலையின் அதிபரிடம் இன்று கையளிக்கப்பட்டதுடன், குறித்த பாடசாலையில் இருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டியதுடன் பரிசுப்பொதிகளும் வழங்கி வைக்ப்பட்டது.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் , கட்சி முக்கியஸ்த்தர்கள், அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -