மாணவிகளை மகிழ்ச்சிப்படுத்தியது வாழைச்சேனை ஆயிஷாவின் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு.

எச்.எம்.எம்.பர்ஸான்-
ர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை (8) பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் பிரதி அதிபர் எம்.யூ.எம்.முகைதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஆர்.முகைதீன், உப செயலாளர் சீ.எம்.எம்.பாரிஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஆசிரியர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளான நகச்சுவை அறிவுக் களஞ்சியம், வந்தால் வெட்டுவோம் சலூன் கடை நாடகம், பலூன் உடைத்தல் போட்டிகள் உட்பட பாடல், கவிதை, நகைச்சுவை கதை போன்றவைகள் இடம்பெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -