பலாங்கொடையிலிருந்து நோர்வூட் பகுதிக்கு மரக்கறி ஏற்றிவந்த லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்
அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் ஜெப்பல்டன் பகுதியிலே 24.11.2019.ஞாயிற்றுகிழமை விடியற்காலை 5.30மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது
பன்றி ஒன்று வீதியின் குருக்கே சென்றமையினால் சாரதியின் கட்டுப்பாடை மீறி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லொறியில் இருந்த பெருமளவிலான மரக்கறி வகைகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.