நெடுங்கேணியில் 2000குடும்பங்களுக்கு அசிற் ஆர்ஆர் உதவி.




காரைதீவு நிருபர் சகா-
மகால கொரோனா நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட நெடுங்கேணி மக்களுக்கு கடல்கடந்த அசிஸ்ற் ஆர்ஆர் அமைப்பு உலருணவு உதவியை 2000 அன்றாடங்காய்ச்சி குடும்பங்களுக்கு வழங்கிவைத்துள்ளது.
அசிஸ்ற் ஆர்ஆர் அமைப்பின் சர்வதேச தலைவர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் அந்நிவாரணப்பொதியை நேரடியாகவே வழங்கிவைத்தார். ஊரடங்குவேளையில் இவ்வுதவியை நெடுங்கேணி பிரதேச செயலாளர் எஸ்.பிரதாபன்
முன்னிலையில் அவரது தெரிவுப்பட்டியலினடிப்படையில் இவை வழங்கப்பட்டன.
தினக்கூலியை நம்பி ஜீவனோபாயத்தை நடாத்தும் குடும்பங்களே இப்பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
ஒவ்வொன்றும் 1000ருபா பெறுமதியான நிவாரணப்பொதியை அசிஸ்ற் ஆர்ஆர் அமையம் முதலில் 500குடும்பங்களுக்கு வழங்கிவைக்க தொடர்ந்து ஜஎம்எச்ஓ மற்றும்
அன்பாலயம் அமைப்பு போன்றன மீதி 1500 குடும்பங்களுக்கும் இப்பொதிகளை வழங்கிவைத்தது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -