ஒருவருக்கு கொரோனா தொற்று : அட்டுளுகமை மூடப்பட்டது ! பழகிய பலர் தலைமறைவு !!



ஏ.எச்.எம்.பூமுதீன்-

துபாயிலிருந்து வருகை தந்த அட்டுளுகமை நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது தெரிய வரவே அவரை, 14 நாட்கள் சுய தனிமைப் படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அதனை அசட்டை செய்த அந்நபர் − அட்டுளுகமையில் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றின் செய்திப்படி , குறித்த நபர் 26 வீடுகளுக்கு சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் 40 வீடுகளுக்குச் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே முழு அட்டுளுகமைக்கும் இன்று பொலிஸார் " சீல் " வைத்து இழுத்து மூடியுள்ளனர்.
தற்போது அங்கு பதற்றமான"சூழ்நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

அட்டுளுகமைக்குள் எவரும் உள் நுழைய முடியாது மட்டுமன்றி , எவரும் வெளியேறவும் முடியாது.

தொற்றினால் பாதிக்கப்பட்ட இளைஞன் நேற்று இரவு IDH வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் நெருங்கிப் பழகிய பலர் தற்பபோது தலைமறைவாகியுள்ளனர்..

இதேவேளை , அட்டுளுகமைக்கு அருகிலுள்ள பேருவளையில் இன்று இடம்பெற்ற ஊர்வலம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது மட்டுமன்றி மக்களின் பலத்த கண்டணத்தையும் எதிர் நோக்கியுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -