நாவிதன்வெளி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுப்பு.

எம்.எம்.ஜபீர்-

நாவிதன்வெளி பிரதேசத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று நீக்கி விசிறும் பணி நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதனின் மேற்பார்வையில் நாவிதன்வெளி பிரதேச செயலகம், சவளக்கடை பொலிஸ் நிலையம், பஸ் தரிப்பிடம், சுகாதார வைத்திய அதிகாரி காரியலாயம் ஆகியவற்றில் பொது மக்கள், உத்தியோகத்தர்கள் பயன்படுத்தும் பகுதிகளை தொற்று நீக்கி விசிறி சுத்தம் செய்யப்பட்டது.

இதில் மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர், கள பொதுசுகாதார பரிசோதகர்கள், சுகாதார ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -