வீட்டில் முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு வீடாகச் சென்று வட்டியில்லாக் கடன் உதவி.

எச்.எம்.எம்.பர்ஸான்-
னாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் சிந்தனையில் உதித்த சஹன பியவர சமுர்த்தி முற்பணக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்தினூடாக ஓட்டமாவடி சமுர்த்தி வங்கியினால் ஓட்டமாவடி - 1, 208 பீ கிராமசேவகர் பிரிவு மக்களுக்கு இன்று (31) கடன் உதவி வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொழிலின்றி வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் வீடுவீடாக சென்று இவ் உதவித்திட்டத்தை வழங்கி வருகிறது.

பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சீ. அஹமட் அப்கர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கடன் உதவியினை வழங்கும் இத் திட்டத்தில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைபீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எம். மஜீத், முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.ரீ.எம். ருமைஸ், வங்கி முகாமையாளர் ரீ.எம் . சிஹான், ஓட்டமாவடி 208 பீ பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.பீ.எம். அப்பாஸ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கே.எம். சர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -