புத்தாண்டுக்குப் பின்னர் 12 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் அவைகளாவன..

ற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது புத்தாண்டுக்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, அம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை, திருகோணமலை, மொனராகலை, அனுராதபுரம், வவுனியா, பொலன்னறுவை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படாமையே இதற்கு காரணத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு அரசாங்கம் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாதுக்க, சீதாவக்க மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பியகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -