நோன்பை முன்னிட்டு கல்குடாவில் 4,200 பேருக்கு உலர் உணவு வழங்கி வைப்பு.


எச்.எம்.எம்.பர்ஸான்-

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரொனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நோன்பை முன்னிட்டு உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.

கல்குடா ஜம்இய்யதுல் உலமா, ஸகாத் நிதியம், பிரதான பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்கள், உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் ஆகியவைகள் ஒன்றிணைந்து, கொவிட் 19 ரமழான் கால நிவாரணப் பணிகளுக்கான சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பு குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.

இதில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் பிரதான நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா, சமூக நிறுவனங்களின் கூட்டமைபின் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.ரிஸ்வி மற்றும் நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -