5000' ரூபாவில் 'கொரோனா' அரசியல் நடத்தாதீர்-வேலுகுமார்

நெருக்கடியான சூழ்நிலையில் தலைமறைவாகியிருந்த சில அரசியல் வாதிகளுக்கு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே கண்டி மாவட்ட மக்கள்மீது அக்கறைவந்துள்ளது.அதுமட்டுமல்ல தற்போது இங்குவந்து 5 ஆயிரம் ரூபாவிலும் அரசியல் நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர்." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் இன்று (22.04.2020) சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

" தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் பரிசுப்பொருட்களுடன் சிலர் கண்டி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளனர். இப்போதாவது அவர்களுக்கு கண்டி மாவட்டம் ஞாபகம் வந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
இவ்வாறுவந்த பின்னர் 5000 ரூபா என்ற கொரோனா அரசியலையும் இங்கு அரங்கேற்றிவருகின்றனர்.

கடந்த 25 நாட்களுக்கு மேலாக கண்டியில் கொரோனா கட்டுப்படுத்தல் செயலணி ஊடாக அரச சேவைகள் சீராக இடம்பெறுவதற்கான வழிநடத்தல்களை செய்துவருகின்றோம். 5000 ரூபா தொடர்பில் எழுந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் சர்ச்சை நீடிக்கின்றது. அதற்கும் நிச்சயம் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.

5 ஆயிரம் ரூபா என்பது எந்தவொரு கட்சி அல்லது நபர் சார்ந்தது அல்ல, மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவாகும் என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.

எனவே, நெருக்கடியான சூழ்நிலையில் வங்குரோத்து அரசியலை நடத்தாமல், மனிதநேய அடிப்படையில் மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -