சர்வாதிகாரத்தின் கோரப்பிடியில் நாடு சிக்கியுள்ளதா? தெளிவு படுத்த வேண்டும் என்கிறார் -சிவமோகன

ர்வாதிகாரத்தின் கோரப்பிடியில் நாடு சிக்கியுள்ளதா? தெளிவு படுத்த வேண்டும் என்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன அவர்கள்
ஒரு ஜனநாயக விழுமியங்களை ஏற்றுக் கொண்டு நாட்டை சுமூகமான நிலையில் நடத்த வேண்டிய கோத்தபாய அரசு அதற்குப் புறம்பான நடவடிக்கைகளை எடுத்து வருவது பாரிய சந்தேகங்களை ஏற்புடுத்துகிறது

ஏனெனில் ஏப்ரல் 26ம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்ட போதும் கூட அநாவசியமான முறையில் ஜனநாயகத்தைப் புறந்தள்ளி செப்ரெம்பர் வரை செயற்பட இருந்த பாராளுமன்றத்தை தனது ஏதேச்சதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்கினார்

தனக்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே பாராளுமன்றத்தை களைத்து விட்டார் மீண்டும் அந்த தேர்தல் நடத்த முடியாமல் போகும் சந்தர்ப்பம் ஏற்பட்ட போதும் கூட தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனையை ஒட்டு மொத்தமாக மறுத்து நின்றார் தேர்தல் ஆணைக்குழு உச்ச நீதி மன்றத்தின் பரிந்துரையைப் பெற்று ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட பொழுதும் அதையும் சர்வாதிகார ரதியில் முடக்கி விட்டார்

இன்று சர்வாதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ள தேர்தல் ஆணைக்குழு ஜனநாயகத்திற்கு புறம்பான தீர்மானங்களை எடுத்து நிற்கிறது சுதந்திரத் தேர்தல் ஆணைக்குழுவை கடந்த கால பத்தொன்பதாவது திருத்ததத்தின் மூலம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றி இருந்தார்கள் இன்று அந்த சுதந்திர ஆணைக்குழுவும் சர்வாதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கிறன்றது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது

அத்துடன் மக்களுக்கான நிவாரனங்களை வழங்கக் கூடிய சூழல் பாராளுமன்றத்தில் இருக்கினற பொழுதிலும் அந்த நிவாரணங்களையும் வழங்காது பாராளுமன்றத்தை கூட்டி அதற்கான தீர்மானங்களையும் எடுக்காது மக்களை பட்டினிச்சாவில் தள்ளி விட்டிருக்கின்றது இந்த அரசாங்கம்

ஜனாதிபதி தேர்தலில் தற்போதுள்ள எதிர்க்கட்சி தோல்வியடைந்தவுடன் ஜனநாயகத்தை மதித்து மஹிந்த ராஜபக்ச அரசிடம் ஆட்சியை ஒப்படைத்தது நாடறிந்த விடயம் எனவே ஜனநாயக ரீதியில் ஒப்படைக்கப்பட்ட ஆட்சியை கூட சர்வாதிகார ரீதியில் திசை திருப்பி நிற்கின்றது இன்றைய கோத்தாபாய அரசு

இன்றுள்ள நிலமையில் ஒரு அவசரகால நிலமையை கூட பிரகடனப்படுத்தாது பாராளுமன்றம் கூட்டப்பட்டு விடுவதை தவிர்த்துக் கொள்வதற்காக நாட்டில் சட்டத்திற்குப் புறம்பான ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்தி தொடர்ச்சியாக இந்த நாடு சர்வாதிகாரத்தின் கோரப்பிடியில் சிக்கி நிற்பது கொரோனாவின் கோரப்பிடியை விட கொடுமையானதாக மாறுமா என்ற சந்தேகம் எழுகிறது என்று வன்னியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -