உலர் உணவு நிவாரண சேவையில் தொடர்ந்தும் கல்முனை நிதாஉல் பிர் அமைப்பு தீவிர ஈடுபாடு


இரண்டாம் கட்டமாக 400 குடும்பங்களுக்கு பொதிகள்
கொரோனா தொற்று அச்ச சூழல் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் வருமானம் இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குகின்ற சேவைகளை கல்முனை நிதாஉல் பிர் சமூக சேவைகள் அமைப்பு காத்திரமான முறையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

இந்த அமைப்பால் முதல் கட்டமாக 1000 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் கடந்த வாரங்களில் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக 400 குடும்பங்களுக்கு நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட உதவிகள் அமைப்பின் சாய்ந்தமருது அலுவலகத்தில் தலைவர் இஸட். எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் வைத்து பொத்துவில், நிந்தவூர், சாய்ந்தமருது போன்ற இடங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -