ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமை நோயாளிகள் வரும்வரை மூடுவதற்கு தீர்மானம்..

பாறுக் ஷிஹான்-
லுவில் தனிமைப்படுத்தல் முகாமை அடுத்த தனிமைப்படுத்த நோயாளிகள் வரும்வரை குறித்த முகாமினை மூடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு புதன்கிழமை(29) முற்பகல் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்


ஒலுவில் கடற்படையினரால் பாதுகாப்பாக தனிமைப்படுத்தி இருந்த கொழும்பு ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களில் அனைவரும் நேற்றுடன் இரண்டு வார கால தனிமைப்படுத்தல் முடித்திருக்கிறார்கள் அதில் இறுதியாக 72 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் . அத்துடன் 35 பாதுகாப்பு மற்றும் படை மருத்துவ உத்தியோகஸ்தர்கள் உட்பட 170 மருத்துவ மாதிரிகள் கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 அதன் முடிவுகள் அனைத்தும் நெகட்டிவ்வாக கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமை அடுத்த தனிமைப்படுத்த நோயாளிகள் வரும்வரை குறித்த முகாமினை மூடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். பொதுவாக கடற்படையினருக்கு ஏற்பட்ட கொரோணா தொற்றுநோய்
200 பேர் ஏற்பட்டதாக எங்களுக்கு புள்ளிவிவரங்கள் கிடைத்திருக்கின்றன அவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் ஒலுவில் பிரதேசத்தில் தனிமை படுத்துவதற்கு கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

அடுத்து கல்முனை பிராந்தியத்தை பொருத்தளவில் அக்கரைப்பற்றில் இரண்டு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு இன்றைய பொழுதில் அவர்கள் இருவரும் சுகதேகியாக இரண்டு வார சிகிச்சைகளுக்கு பின்னர் அவர்களை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். 

இதனைத் தொடர்ந்து அவர்களுடைய நேரடி தொடர்பு கொண்டு ஐந்து பெயர் பொலநறுவை தமின முகாமிலிருந்து சிகிச்சை பெற்று வீடு வந்திருக்கிறார்கள். இவர்களுடன் தொடர்புடைய மேலும் 9 பேர் மாத்திரம் இதுவரை பொலநறுவை சிகிச்சை முகாமில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அவரைப்பற்றி நிலைமை தற்போது சுமுகமாக திரும்பி இருக்கின்றது. ஆதலால் அக்கரைப்பற்றில் சூழல் உள்ள விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அக்கரைப்பற்று உட்பட கல்முனை சுகாதார பிராந்தியக் உட்பட அனைத்து பிரதேசங்களும் பாதுகாப்பாக சென்று வரக்கூடிய அளவிற்கு கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன் வெலிசறை கடற்படை முகாமில் புற்றுநோய் ஏற்பட தொடர்ந்து எமது பிரதேசத்தில் கொள்ளும் 3 கடற்படையினர் வெளிசர பகுதியிலிருந்தும் மாத்திரை பகுதியிலிருந்தும் மூன்று பேர் எமது பகுதிகளுக்கு வந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் சந்தேகப்படும் படியாக நடமாடிய இடங்களை நாங்கள் ஆராய்ச்சி செய்து இருக்கின்றோம் தொற்று ஏற்படக் கூடிய வகையில் குறித்த வீரர்களுடன் நேரடி தொடர்புடைய 23 பேர் ஆறு தாதிய உத்தியோகத்தர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். 

நாளை குறித்த கடற்படை வீரர்கள் அது பரிசோதனை முடிவுகள் வரும்போது இதுகுறித்த தனிமைப்படுத்தல் விலக்கிக் கொள்ளப்படும்.உண்மையில் வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கம் ஒரு முடிவு எடுத்திருந்தது சகலவிதமான முப்படையினரையும் விடுமுறையில் சென்றவர்களையும் தமது முகாமுக்கு மீள அழைத்திருந்தனர். அதனை தொடர்ந்து எமது பிரதேசத்தில் 158 அவர்களது தங்குமிட வசதி பற்றாக்குறை காரணமாக பாதுகாப்பு அமைச்சு ஒரு முடிவினை எடுத்திருந்தது. 

 காஞ்சிரங்குடா கால்நடை பயிற்சி மையத்தில் 44பேரும் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை74 பேரும் இ கல்முனை சுபத்திரா ராமர் விகாரையில் 40 பேரும் தக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சாதாரண நோய் தொற்றுக்கு ஆளாகாத வீரர்கள் எனவே பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை அழுத்தமாக தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -