ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வு..!


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.எஸ்.எம்.வசீம், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.எம்.நஜீப்கான், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் ரி.ஹரிபிரதாப், வாழைச்சேனை பொலிஸார், பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர்கள், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர், மீனவர் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வெளி மாவட்டத்திற்கு மீன் கொண்டு செல்லும் நபர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டு பின்னர் திரும்பும் பட்சத்தில் பதினான்கு நான்கள் சுய தனிமைப்படுத்தில் இருக்க வேண்டும். அத்தோடு வேறு மாவட்டத்தினர் யாரையும் வாகனத்தில் ஏற்றி வரக் கூடாது.

வெளி மாவட்டங்களில் இருந்து மீன் கொள்வனவிற்கு வரும் வாகனங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பிரதேசத்தினை காப்பாற்றும் நோக்கில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் ஆழ்கடலுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு சிறு படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மாத்திரம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விசேட கலந்துரையாடலில் மேற்படி விடயங்கள் தீர்மானிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -