விவசாயிகள் மற்றும் வயல் சொந்தகாரருக்கு விஷேட உதவித்தொகை வழங்க மயோன் முஸ்தபா ஏற்பாடு!


2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெற் செய்கையின் போது ஏற்பட்ட கபில நிற தத்தி நோய் தாக்கம் காரணமாக பாதிப்புற்ற விவசாயிகளுக்கு விசேட கொடுப்பனவாக 5000 ரூபாவினை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பாதிப்பை விவசாயத் திணைக்களத்தில் உறுதி செய்து இருத்தல் அவசியமாகும். அத்துடன் காப்புறுதி நிறுவனங்களின் ஊடாக ஏற்கனவே 5000 க்கு உட்பட்ட தொகையினை பெற்றவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான விண்ணப்ப படிவத்தினை எனது கல்முனை காரியாலயத்தில் பெற்றுக்கொண்டு உடனடியாக பூரணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
குறிப்பு:
இந்த கொடுப்பனவு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கொடுத்து முடிக்க வேண்டி இருப்பதால் அவசர அவசரமாக இந்த விண்ணப்பத்தினை பூரணப்படுத்தி தருமாறு வேண்டுகிறேன்.
மயோன் முஸ்தபா
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர்
றிஸ்லி முஸ்தபா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -