காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளி நோயாளர்களுக்கு மருத்துவ சேவை


காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வைத்தியசாலைகளில் (க்கிளினிக் ) மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில்  (31) ஆரம்பமானது

இதன் போது முதல்கட்டமாக சிறுவர்களுக்கான நரம்பியல் நோய் நிபுணர் அனுருத்த பாதெனிய கையடக்க தொலைபேசியில் காணொளி தொடர்பு மூலம் சிறுவர் ஒருவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.\
இதன் மூலம் தற்போதைய கொரோனா நோய் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளுக்கு வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தருவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் இந்த வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக விசேட நடமாடும் வேலைத்திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனைக்கு அமைய சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

0770773333 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் oDoc app கையடக் தொலைபேசி யில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் இதுதொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -