இன்று கணிதபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் இலங்கநாதன் ஓய்வு.


காரைதீவு நிருபர் சகா-
ல்முனை வலய கணித பாடத்திற்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் சீனித்தம்பி இலங்கநாதன் இன்றுடன் (25-சனிக்கிழமை) தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுகிறார்.

காரைதீவைச்சேர்ந்த திரு.இலங்கநாதன் கல்விச்சேவையில் 32வருடகால சேவையினைப்பூர்த்திசெய்தவராவார். கல்முனை நற்பிட்டிமுனையில் பட்டதாரி ஆசிரியையான திருமதி விஜயலக்ஸ்மியை கரம்பிடித்த அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
பேராதனைப்பல்கலைக்கழக பௌதீகவிஞ்ஞானத்துறைப் பட்டதாரியான இவர் 1988முதல் அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை முஸ்லிம்மத்திய கல்லூரி கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை மருதமுனை சம்ஸ் மத்தியகல்லூரி காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் 2012வரை விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றினார்.

பின்னர் கல்முனை கல்வி வலயத்தில் கணித பாட ஆசிரியஆலோசகராக 2012இல் நியமனம்பெற்று 2017முதல் இன்று ஓய்வுபெறும்வரை கணிதபாட உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றினார்.
இவர் கல்வித்துறையில் மட்டுமல்லாமல் ஆன்மீகத்துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவராவார்.
இவரது சேவைக்காலத்தில் கல்முனைவலயம் கணிதபாடத்தில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியைக்கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -