கொரோனா தொற்றால் நோய்ப்பட்டு இறந்த ஒருவர் தன் மனைவிக்கு எழுதிய உருக்கமான மடல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்த தனது கணவரின் உருக்கமான இறுதிக் கடிதத்தை வெளியிட்டுள்ளார் அமெரிக்காவின் கனெக்டிகட்டைச் சேர்ந்த மனைவியான கேட்டி என்பவர்.

கணவரின் உருக்கமான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“நான் உங்கள் அனைவரையும் என் முழு இதயத்தோடும் நேசிக்கிறேன், நீங்கள் எனக்கு மிகச் சிறந்த ஒரு வாழ்க்கையைக் கொடுத்தீர்கள். கேட்டி, நான் சந்தித்ததிலேயே நீதான் மிகவும் அழகான, அருமையான பெண். நம் மகன் பிரெடெனிடம், அவன்தான் எனது மிகச்சிறந்த நண்பன் என்று, அவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.

நம் மகள் பெனெலோப்பிடம், அவள் ஒரு இளவரசி என்று, அவள் வாழ்க்கையில் என்னவெல்லாம் ஆசைப்படுகிறாளோ அவை எல்லாம் அவளுக்கு கிடைக்குமென்று சொல்.

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, உன்னையும் நம் பிள்ளைகளையும் நேசிக்கும் ஒருவரை நீ கண்டுபிடித்தால் அதுவும் எனக்கு மகிழ்ச்சிதான். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்”

என்று தனது கணவரான ஜான் அதில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கிறார் கேட்டி.

சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படும் இந்தச் செய்தி கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை குறித்த விவாததத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -