செய்திகளை வெளியிடும் போது சம்பந்தப்பட்ட நபரின் அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டாம்.

அரசாங்க தகவல் திணைக்களம் மீண்டும் ஊடகங்களிடம் வலியுறுத்து
கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
கொவிட் 19 தொடர்பான செய்திகளை வெளியிடும் போது ஊடக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் பற்றி அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சென்ற 06.04.2020 அன்று ஊடக நிறுவனங்களுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய தினம் (25) அரசாங்க தகவல் திணைக்களத்தினால், ஏற்கனவே (06) அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதியுடன் மற்றுமொரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் என்னவென்றால், "சில சந்தர்ப்பங்களில் நீங்கள் செய்திகளை வெளியிடும் போது சம்பந்தப்பட்ட நபர்களுடைய அடையாளங்கள், வேலை செய்யும் இடம், தொழில், குடும்ப அங்கத்தவர்களின் விபரம், குடும்பங்களின் அல்லது குழுக்களின் அடையாங்களை வெளிப்படுத்தும் விதத்தில் செய்திகளை வெளியிடுவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த கடிதத்தில் உள்ள 03, 04 மற்றும் 05 ஆவது பகுதிகளை கடுமையாக பின்பற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்" என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவின் கையொப்பத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -