சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த ஒருவர் கைது.


க.கிஷாந்தன்-

த்தனை, மவுண்ட்வேர்ணன் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் பொழுது சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்வதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த பொலிஸார் 29.04.2020 அன்று காலை சுற்றிவளைத்த போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து 45 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரையும், மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் ஆகியனவற்றையும் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -