கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 1187 பயனாளிகளுக்கு 5000.00 ரூபா கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டது.


ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ரசாங்கத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய சமூகசேவைகள் திணைக்களத்தின் ஊடாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முதியோர், விசேட தேவையுடையோர் மற்றும் புற்றுநோய், சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட 5000.00 ரூபா கொடுப்பனவுகளை வழங்கிவைக்கும் நிகழ்வு (15) பிரதேச செயலகத்தின் 29 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜின் வழிகாட்டலுக்கு அமைய இந்தக் கொடுப்பனவுகள் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது மாதாந்த உதவிபெறுவோருக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது.
பிரதேச செயலகத்தின் கீழுள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளிலுமுள்ள 1187 பயனாளிகளுக்கும் என 58இலட்சத்து 72ஆயிரத்து அறுநூறு ரூபா (5872600.00) நிதி பகிர்ந்தளிக்கப்பட்டன.
சமூக இடைவெளி பேணப்பட்டு சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட்டு பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வுகளில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முர்சித், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி மற்று கிராம மட்டங்களில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -