சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் இடம்பெயர்வு


க.கிஷாந்தன்-
லைநாட்டில் தொடரும் அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று பிரதேச சபை தவிசாளர் எஸ். கதிர்ச்செல்வன் தெரிவித்தார்.
இதன்படி லிந்துலை எகமுதுகம பகுதியில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும், ராணிவக்த பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும், பேர்ஹம் தோட்ட பகுதியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்தந்த தோட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது எனவும் தவிசாளர் எஸ். கதிர்ச்செல்வன் தெரிவித்தார்.
எகமுதுகம பகுதியில் வீடொன்றின் மீது பாரிய மண்மேடொன்று சரிந்து விழுந்த போதிலும் அதில் தங்கியிருந்த 9 பேரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -