கந்தளாவ 514 பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத ஜகம்பத் விஜயம்.


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாவ 514 பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத ஜகம்பத் இன்று(18) விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கந்தளாய் ,கந்தளாவ பகுதியில் நூறு ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நஞ்சற்ற உணவு உற்பத்தி வகைகளை பார்வையிட்டார்.
கந்தளாவ பகுதியில் கடந்த வரும் மேற்கொள்ளப்பட்டப்பட்ட நஞ்சற்ற உணவு உற்பத்திகள் அழிவடைந்த நிலையில் இவ்வருடம் கிழக்கு மாகாண ஆளுனரின் பரிப்புரைக்கமைய உணவு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்விஜயத்தின் போது விவசாயிகளுக்கு நஞ்சற்ற உணவு உற்பத்திக்கான பசளை வகைகள் மற்றும் நன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்விஜயத்தில் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் ஏ.எம்.ஹுசைன் ,ஆளுனரின் செயலாளர் உட்பட விவசாய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -