இலங்கையில் இதுவரை 55 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் மொத்தம் - 1,613

ன்று (30) இரவு 10.30 மணியளவில் 27 பேரும், 11.00 மணியளவில் 20 பேரும் அடையாளம் காணப்பட்ட நிலையில், தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,566 இலிருந்து 1,613 ஆக அதிகரித்துள்ளது.

இன்றையதினம் (30) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, 27 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படையினர் 25 பேர், மாலைதீவிலிருந்து வந்த 03 பேர், குவைத்திலிருந்து வந்த 08 பேர், கட்டாரிலிருந்து வந்த 19 பேர் உள்ளடங்குவதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.



இதேவேளை, நேற்றையதினம் (29) குவைத்திலிருந்து வந்ததாக அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ உறுப்பினர் என சரிப்படுத்தப்பட வேண்டும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். ஆரம்ப கட்ட ஆவணப்படுத்தலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உறுதிப்படுத்தலை அடுத்து இது அறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த இராணுவ உறுப்பினர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகை தரும் பகுதியில் கடமையில் ஈடுபட்ட நிலையில், குவைத்திலிருந்து வந்த குழுவுடன் நெருக்கமாக தொடர்புற்று பணிகளில் ஈடுபட்டவர் எனவும், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,613 பேரில் தற்போது 822 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 781 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 55 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 1,613
குணமடைவு - 781
இன்று அடையாளம் - 55
இன்று குணமடைவு - 27
சிகிச்சையில் - 822
மரணம் - 10
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -