காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்று உடல் நலம் குணமடைந்த 55பேரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நாளை


பழுலுல்லாஹ் பர்ஹான்-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி காத்தான்குடி தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்று உடல் நலம் குணமடைந்த 55பேரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நாளை 10 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காத்தான்குடி தள வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி 55பேரை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் அவர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உடல் நலம் குணமடைந்து வழியனுப்பி வைக்கப்படுகின்ற 55பேரும் இராணுவத்தினரின் உதவியுடன் அவர்களுடைய வீடுகளுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -