புரிந்துணர்வை பெரும்பான்மை சமூகத்தில் ஏற்படுத்த சிங்கள மொழியினை அனைவரும் கற்க வேண்டும்.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

மகால இலங்கையின் சமூக – பொருளாதார - அரசியல் – தளத்தில் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. அரசியல் ரீதியாக இச்சவால்களை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் நாளாந்தம் அருகிவருகின்றன. எண்ணிக்கை அடிப்படையில் எமது அரசியல் பலம் என்பது சுமார் பத்து சதவீதமானது மட்டுமே.

கடந்தகாலத்தில் இப்பலத்தினைக்கொண்டு நாம் நிறையவே சாதித்திருக்கின்றோம். அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவ்வப்போது கைகூடியிருந்தது. ஆனால் அந்தநிலை தொடர்ந்தும் நிகழப்போவதில்லை. இதற்காக நாட்டில் புரிந்துணர்வை பெரும்பான்மை சமூகத்தில் ஏற்படுத்த சிங்கள மொழியினை அனைவரும் கற்க வேண்டும்.

இவ்வாறு தென்கிழக்கு பல்கலைக்கழக அரசறிவியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.பௌஸ் தெரிவித்தார்
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,
சமூகத்தளத்தில் சம காலத்தில் தோன்றியுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். 

அதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஒருசிறுபான்மை சமூகம் என்றவகையில் நமது பொறுப்புக்களை நாம் உணர்ந்து செயற்படவேண்டிய தேவையிருக்கிறது. எந்த சிங்கள அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சதாவும் எங்களுக்காக குரல்கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. 

நாம் எண்ணிக்கையால் மிகச்சிறுபான்மையாக இருப்பதனால், தேர்தல் அரசியலை இலக்குவைத்துச் செயற்படும் சிங்களத்தலைவர்கள் எவரும் எமது அபிலாசைகளில் வெளிப்படையான அக்கரையினை காட்ட விரும்பப்போவதில்லை.

ஆனால்பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களை நாம்வெற்றிகொள்ள முடியும். அதற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. சிங்கள மக்களின் பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை, மொழியினை, கலாசாரத்தினை நாம் அறிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் எதிர்ப்பு உளவியலை சமூக ரீதியாக வெற்றிகொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

எமது நம்பிக்கையின் கலாசாரத்தின் முக்கியத்துவத்தினை நாகரீகமான முறையில் மற்றையவர்களுக்கு எடுத்தியம்ப வேண்டும். ஊடக அரசியல் வியாபாரிகளால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படுகின்றபோது, அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள எம்மை தயார்படுத்த வேண்டியுள்ளது. முஸ்லிம்கள் தேசவிரோதிகளாக காட்டப்படுகின்றபோது, இலங்கை தேசத்திற்கு முஸ்லிம்கள் வழங்கிய மகத்தான அர்ப்பணிப்புக்கள் வெளிக்கொண்டு வரப்படவேண்டும்.

இதற்காக தாய்மொழியினைக்கை விடாத அதேநேரம், சிங்கள மொழியினைக் கற்பது காலத்தின் கட்டாயமாகும். சிங்கள மொழியில் புலமையுள்ள உலமாக்கள், சமூகத் தலைவர்கள், கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள் உருவாக்கப்படவேண்டும் . 

அவ்வாறானவர்களால் சமூகம் வழிநடத்தப்படுகின்றபோது, எமது அரசியலும் இலங்கை தேசத்திற்கு ஏற்புடையதாகமாறும் என்பதில் ஐயமில்லை.வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் சிங்கள மொழியில் அதிகபரிட்சயத்தினைக்கொண்டுள்ள போதிலும் அங்கும் சிங்களமொழி மூலமான கல்வியினைத் தொடர்பவர்கள் தொகைமிகவும் சொற்பமாவே உள்ளது. இந்தநிலை மாறவேண்டும். 

சிங்களமொழி மூலமான கற்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பரவலாக விஷ்தரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும்.
என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -