திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவில் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை 4ஆம் கட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டவராவார்.
இவரிடமிருந்து 1180 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலும் குறிப்பிட்டனர்.