ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் திருமலையில் கைது


எம்.ஏ.முகமட்-
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவில் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை 4ஆம் கட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டவராவார்.

இவரிடமிருந்து 1180 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -