கிண்ணியாவில் இரு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. - டொக்டர் அஜீத்


எப்.முபாரக்-
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சிம் அட்டை வியாபார முகவர்களின் இரு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஏம்.ஏ.அஜித் நேற்று (27) மாலை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
கிண்ணியா பைசல் நகர் மற்றும் ரஹ்மானியா நகர் ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள இரு குடும்பங்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரின் உத்தரவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்த அவர்,
இந்த இரு சிம் அட்டை வியாபார முகவர்களும் திருகோணமலை குரங்கு பாலம் இராணுவப் படைத்தளத்தளத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்களுக்கு கடந்த 2020.05. 20 ஆம் தேதியன்று சிம் அட்டைகளை விற்பனை செய்யச் சென்றவர்களாகும் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, அந்த முகாமில் குவைத், கட்டார் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் இரத்த மாதிரிகள் கோரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது, இவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு தொற்றுக்கு இலக்கானவர்கள் தாம் தொடர்புபட்டவர்கள் குறித்து வழங்கிய தகவலை அடுத்து இந்த சிம் அட்டை முகவர்கள் இருவரும் சுய தனிமைப்படுத்தி உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர்.
இவர்கள் இருவரோடு, மேலும் திருகோணமலை, கந்தளாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருமாக மொத்தம் 4 முகவர்கள் வியாபார நோக்கமாக இந்த தனிமைப்படுத்தல் முகாமுக்குச் சென்று வந்திருக்கிறார்கள் என்ற தகவலும் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, றஹ்மானியா பிரதேசத்திலுள்ள சிம் அட்டை முகவரின் வீட்டிற்கு சென்று வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறோம் என்றும் தெரிவித்த சுகாதார வைத்தி அதிகாரி,
கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இந்த இருவரும் சென்று வந்த இடங்கள், அவர்கள் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து முழுமையான தகவல்களைப் பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். இதற்காக சுகாதாரப் பிரிவினர், பொலிஸார், பொதுமக்கள் என பல்வேறு பிரிவினர்களின் ஒத்துழைப்பையும் கோரியிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -