குவைட் மன்னரை நாய் என்று திட்டிய இலங்கைப் பெண் அதிரடியாக கைது!


காமிலா பேகம்-
குவைட் மன்னரை நாய் என்று திட்டிய சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த இலங்கைப் பெண் அந்நாட்டு பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் இடையே இலங்கை தொழிலாளர்களை குவைட் அரசாங்கம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறித்த பெண் முகநூலில் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
அத்துடன், குவைட் மன்னர் ஒரு நாயை போன்றவர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து அந்த பெண் வெளியிட்ட காணொளி அந்நாட்டு பொலிஸ் உயரதிகாரிகள் வரை சென்றுவிட்டது.
இதனையடுத்து குவைட் நாட்டில் உள்ள குறித்த இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவருக்கு தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டு குறைந்தது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -