கிண்ணியாவில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது


எப்.முபாரக்-
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை இன்று(17) கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஹ்ரூப் நகர்,கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31,மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா வெள்ளை மணல் பகுதியில் வைத்து ஒருவரிடம் 1500 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளும்,மற்றொருவரிடம் ஒரு கிராம் போதைப் பொருளும் வைத்திருந்த நிலையில் கிண்ணியா போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -