பாராளுமன்றம் இனிகூடாது: திட்டவட்டமாக அறிவிப்பு!


ஜே.எப்.காமிலா பேகம்-
"கலைக்கப்பட்டிருக்கும் இலங்கை பாராளுமன்றம் இனி கூட்டப்படாது" என்பதை ஆளும் பொதுஜன முன்னணி இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறது.

கொழும்பில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தவிசாளர்களில் ஒருவராகிய பேராசிரியரும், சட்ட மேதையுமான ஜி.எல்.பீரிஸ் மேற்படி கூறினார்.

‘மக்களினால் கடந்த காலங்களில் இந்த நாடாளுமன்றம் வெறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அரசமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்திற்கமைய வரையரைக்குள் ஜனாதிபதி இப்பாராளுமன்றைக் கலைத்தார். அதனை சவாலுக்கு உட்படுத்த எவராலும் முடியாது. இருப்பினும் எதிர்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நலன்களுக்காகக் கூச்சலிட்டு வருகின்றனர்’ என்று அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -