"கலைக்கப்பட்டிருக்கும் இலங்கை பாராளுமன்றம் இனி கூட்டப்படாது" என்பதை ஆளும் பொதுஜன முன்னணி இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறது.
கொழும்பில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தவிசாளர்களில் ஒருவராகிய பேராசிரியரும், சட்ட மேதையுமான ஜி.எல்.பீரிஸ் மேற்படி கூறினார்.
‘மக்களினால் கடந்த காலங்களில் இந்த நாடாளுமன்றம் வெறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அரசமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்திற்கமைய வரையரைக்குள் ஜனாதிபதி இப்பாராளுமன்றைக் கலைத்தார். அதனை சவாலுக்கு உட்படுத்த எவராலும் முடியாது. இருப்பினும் எதிர்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நலன்களுக்காகக் கூச்சலிட்டு வருகின்றனர்’ என்று அவர் தெரிவித்தார்.