அரசாங்கம் விட்ட தவறினாலேயே நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. -தயா கமகே


பி.எம்.எம்.ஏ.காதர்-
லங்கை நாட்டுக்குள் விமான நிலையத்தினூடாகவும் துறைமுகத்தினூடாகவுமே கொரோனா உள்நுழைந்திருக்கின்றது.ஆரம்பத்தில் வெள்நாட்டிலிருந்து வந்த 24 பேருக்கு தொற்று அடையாளங் காணப்பட்டது.அரசாங்கம் ஆரம்பத்தில் விட்ட தவறினால் முழு நாடுமே இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. என முன்னாள் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பிலும் நாட்டின் இன்றைய நிலைமை தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப் பொன்று சனிக்கிழமை(16-05-2020)அம்பாறை தயா ஆடைத்தொழிற்சாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இங்கு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் தயாகமகே இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பிரதியமைச்சர் அனோமா கமகே தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் தயாகம மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது நாட்டு மக்களின் நலனில் அக்கரை காட்டாது மிக விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கை நாடு நாலா பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இந்த நாட்டுக்குள் விமான நிலையத்தினூடாகவும் , துறைமுகத்தினூடாகவுமே எல்லாம் உள் நுழைய முடியும்.ஆரம்பத்தில் வெள்நாட்டிலிருந்து வந்த 24 பேருக்கு தொற்று அடையாளங் காணப்பட்டது .அரசாங்கம் ஆரம்பத்தில் விட்ட தவறினால் முழு நாடுமே இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் 22 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 42,067 குடும்பங்களே கொரணா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய குடும்பங்கள் எந்தவொரு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் ஜனாதிபதி பிரதமர் மற்றும் அவர்களைச் சுற்றியுளோர் கிழமைக்கு இரு தடவைகள் பரிசோதனை மேற் கொள்கின்றனர்

ரணில் விகரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியானது அரசாங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பது தொடர்பில் வழங்கும் எந்த ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ள அரசு தயாராக இல்லாமல் பொதுத் தேர்தலை எப்படியாவது நடத்தி முடிப்பதில் குறியாக இருக்கின்றது.ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களும் இன மத பிரதேச வேறுபாடின்றி அபிவிருத்தி கண்டது.
இன வெறி உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொண்டனர். அதே பாணியில் பொதுத் தேர்தலிலும் நடந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியில் இன மத பிரதேச வேறுபாடுகள் கிடையாது .எல்லோரும் இந்நாட்டு மக்களே.என்ற கோட்பாடே உள்ளது.
.ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதால் நாளாந்தம் உழைத்து உண்ணும் மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு உள்ளாகி வருவதுடன் பெண்கள் , சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் வீட்டில் அடங்கி கிடப்பதால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியும் வருகின்றனர்
.முப்படை வீரர்கள் , பொலிஸார் , சுகாதார திணைக்கள அதிகாரிகள் , வைத்தியர்கள் , தாதியர்கள் , அரசாங்க அதிபர்கள் , பிரதேச செயலாளர்கள் , சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் , கிராம சேவை உத்தியோஸ்தர்கள் மற்றும் சுகாதாரத்தொண்டர்கள் மக்களை இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாப்பதற்காக இரவு பகல் பாராது தியாக மனப்பாங்கோடு சேவையாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு இந்நாட்டு மக்கள் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.இதே போன்று பொது மக்களும் தங்களாலான அர்ப்பணிப்புக்களை செய்து கொண்டிருப்பதையும் நாம் மறந்து விடமுடியாது.
நாட்டிலுள்ள 61 இலட்சம் குடும்பங்களில் அரச உத்தியோஸ்தர்கள் 16 இலட்சம் குடும்பங்கள் நீங்கலாக 45 இலட்சம் குடும்பங்கள் அரசினால் வழங்கப்படும் உதவி தொகையினை பெற தகுதி பெற்றுள்ளனர்..
ஆனால் இதுவரை 70 இலட்சம் குடும்பங்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.. இருந்தும் அதிகளவிலான மக்கள் இந்த உதவித் தொகை இதுவரை கிடைக்கவில்லை என்றே கூறுகின்றனர். இந்த உதவித் தொகை யாரைச்சென்றடைந்தது .இதில்.ஊழல்கள் நடை பெற்றுள்ளதா என்பதைக்கண்டறிய உடனடியாக ஜனாதிபதி விசாரணைக்குழுவொன்றை நியமித்து இந்த ஊழல் பேர் வழிகளை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்த வேண்டும்.என அவர்லும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் தமிழ்,முஸ்லிம் ஊடவியலாளர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -