திருகோணமலை ,கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் வில்வெளி கிராம மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு


எம்.ஏ.முகமட்-
அல் ஹித்மதுல் உம்மா நிறுவனத்தினால் கொரோனா (கொவிட்19 ) தொற்று காரணமாக தொழிலின்றி பாதிக்கப் பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வில்வெளி ஜும்ஆப் பள்ளி வாசல் மண்டபத்தில் நேற்று வழங்கி வைக்கப் பட்டன.

நாளாந்த வருமானம் குறைந்த 150 குடும்பங்களுக்கு முன்னாள் கிண்ணியா நகர சபைத் தவிசாளரும் டொக்டரும் சட்டத்தரணியுமான ஹில்மி மகரூப்,அல் ஹித்மதுல் உம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் முகம்மட் பாத்திஹ் ஹஸ்ஸாலி ஆகியோர் இவ் உலர் நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.

இந் நிறுவனம் திருகோணமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக தொழில் ரீதியாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு இந் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -