வெளிச்சத்துக்கு வரும் ரவூப் ஹக்கீமின் இரகசியங்கள்


எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி-
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட்-19 தொற்று காரணமாக தொடரான ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் எல்லா இனமக்களும், எல்லா தரப்பினரும் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கினார்கள். இந்த சிக்கலான நேரத்தில் சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக பாலித தேவப்பெரும, ரஞ்சன் ராமநாயக்க போன்றோர் களத்தில் இறங்கி தம்மாலான உதவிகளை மக்களுக்கு வழங்கினார்கள். அவர்கள் உதவியமைக்கு ஆதாரமாக குறித்த நேரத்தில் போட்டோக்களும் எடுத்துக்கொண்டார்கள்.
ஆனால் முஸ்லிம் தலைமைகளை வெளியே காணவில்லை. அவ்வப்போது ரவூப் ஹக்கீம் முகநூலில் தோன்றி நோன்பு தொடர்பில் உரையாற்றினாரே தவிர வேறு எந்த செயற்பாட்டினையும் அவர் மேற்கொண்டதாக காணக்கிடைக்கவில்லை.ரவூப் ஹக்கீம் வெளியே தலை காட்டாதது தொடர்பில் சமூக மட்டத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இருந்தும் ரவூப் ஹக்கீமை காணக்கிடைக்கவில்லை.

இதற்கிடையே திருகோணமலையில் எம்.எஸ்.தௌபீக், மட்டக்கிளப்பில் எச்.எம்.எம். றியாழ், கபீப் றிபான், அலி ஸாஹிர் மௌலானா, ஹாபிஸ் நஸீர் அஹமட், அம்பாறையில் பைசல் காசிம், எச்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்ஸூர், ஏ .எல் .நஸீர், ஏ .எல். தவம், ரஹ்மத் மன்ஸூர் உட்பட பலர் உலருணவுப்பொருட்களையும் இன்னோரன்ன உதவிகளையும் அந்தந்த பிரதேசத்து மக்களுக்கு வழங்கியமை தொடர்பில் உதவி பெற்றவர்களின் நன்றி தெரிவித்தலின் மூலமும், அவர்களின் முகநூல் பதிவுகளின் மூலமும் அறியப்பட்டன.
இப்போதும் ரவூப் ஹக்கீம் எங்கும் ஏதாவது செய்துள்ளாரா? என்று பரவலாக தேடப்பட்டது அடுக்கடுக்கான விமர்சனங்கள் ரவூப் ஹக்கீம் மீது வைக்கப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பில் ரவூப் ஹக்கீமின் பிரத்தியேக செயலாளராக இருந்த நயீமுல்லாஹ்விடம் கேட்டுப்பார்த்தேன் அவருக்கு எதுவும் தெரியாது என்று பதில் தந்தார். பின்னர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் ரவூப் ஹஸீரிடம் இதுபற்றி வினவினேன் அவர் அது பற்றி எதுவும் தனக்கு தெரியாது ரவூப் ஹக்கீமிடம் விசாரித்து சொல்வதாக சொன்னார்.மறுநாள் ரவூப் ஹக்கீமிற்கு ரவூப் ஹஸீர் அனுப்பிய ஈ மெயிலுக்கு ரவூப் ஹக்கீீம் அனுப்பிய பதில் என கீழேயுள்ள குறிப்பை ரவூப் ஹஸீர் அனுப்பி வைத்தார்.

"Donations and provision distribution is a matter of personal joy which I have been doing throughout during every Ramadan season. However I never would wish that should be given publicity. Besides with an election ahead of us will show me in poor light. Instead we could do short videos on Ramadan and what is expected of us during this pandemic situ"

" தர்மம் எனது தனிப்பட்ட விடயம். அதனை எவருடனும் பகிர்ந்து கொள்ளவோ,அதன் மூலம் தான் இலாபமடையவோ , விளம்பரம் தேடவோ விரும்பவில்லை" என ரவூப் ஹக்கீம் கோபத்தோடு கண்டித்ததாகவும் சொன்னார்.
இவ்வாறான சூழலில் ரவூப் ஹக்கீமின் சில இரகசியங்கள் கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தொடக்கம் கண்டிபிரதேசத்தை சேர்ந்த சிலரது முக நூல்களில் அம்பலமாகின.

ரவூப் ஹக்கீம் நேரடியாக எந்த பொருட்களையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களை , அல்லது ரவூப் ஹக்கீம் தனது ஆதரவாளர்களை நேரில் சந்தித்து வழங்காமல் குறிப்பிட்ட பிரதேச பள்ளிவாயல் நிர்வாகங்களுக்கு சுமார் இரண்டு கோடிகளுக்கும் அதிகமான பொருட்களை கட்சி பேதம் பாராது வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
" வலது கையால் வழங்குவதை இடது கைக்கு தெரியாமல் தர்மம் செய்வதெப்படி " என்பதை ரவூப் ஹக்கீம் செயலில் காட்டியுள்ளார்.

அரசியலுக்கு அப்பால் ரவூப் ஹக்கீம் ஒரு உண்மையான மனிதநேயமுள்ள இஸ்லாமியன் என்பதனை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.

இதுபற்றி மேலும் துருவி பார்த்தபோது ரவூப்
ஹக்கீம் இந்த நாட்டில் ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்து மிகவும் இரகசியமாக இந்த உதவி வழங்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவை எவற்றுக்கும் அவர் அல்லாஹ்வையும், பெற்றுக்கொண்ட குறித்த ஊரின் பள்ளி நிர்வாகங்களையும் தாண்டி வேறு யாரையும் சாட்சியாக ஆக்கிக்கொள்ளவில்லை. உதவியை வழங்கும் போது புகைப்படம் எடுத்து தனது முகப்புத்தகத்தில் போட்டு தன்னை வெளிப்படுத்தவில்லை.
அப்படியானால் ரவூப் ஹக்கீமின் இந்த இரகசியங்கள் எப்படி வெளிச்சத்திற்கு வந்தன? இதனை அம்பலப்படுத்திய நபர் யார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆம் அக்குரனை பள்ளிவாயலுக்கு பல தனவந்தர்கள் வழங்கிய நிவாரண நிதி பற்றிய அறிக்கையை அந்த நிர்வாகம் NOTICE BOARD இல் பகிரங்க படுத்தி இருந்தது.
அக்குறனையை சேர்ந்த பெரும் பெரும் தனவந்தர்கள் பலரது பெயர்களுக்கு இடையில் ரவூப் ஹக்கீமினால் வழங்கப்பட்ட நிவாரண
நிதியான 36 இலட்சம் ரூபாய்களும் அங்கே போடப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் போடப்பட்டிருந்த தொகைகளுள் மிக அதிகமான தொகையாக ரவூப் ஹக்கீம் -36 இலட்சம் எனபோடப்பட்டதை அவதானித்த அக்குரனை நண்பர்கள் பலர் அதனை முகநூலில் பகிர்ந்து தமது நன்றியினை தெரிவித்திருந்தார்கள்.

குறித்த பட்டியல் வெளியானவுடன் தான் இன்னும் பல இரகசியங்கள் ரவூப் ஹக்கீம் தொடர்பில் வெளியாகின.
உடுநுவரையை சேர்ந்த ஒருவர் அந்த பகுதிக்கு 32 இலட்சம் பெறுமதியான ரவூப் ஹக்கீமின் நிவாரண உதவி கிடைத்தது என்றும் , திகனை , குண்டசாலை பகுதிகளுக்கு மொத்தமாக 12 இலட்சம் பெறுமதியான ரவூப் ஹக்கீம் அனுப்பி இருந்த நிவாரண பொருட்கள் பகிர்தளிக்கப்படுவதை ஆதாரத்திற்கு சில போட்டோக்களோடு இன்னொருவர் பகிர்ந்திருந்தார்.

இவ்வாறாக திடீர் திடீர் என தெல்தோட்டை கம்பளை , மடவளை,
கண்டி நகர் , உடதலவின்ன , கலகெதர , தெஹிதெனி மடிகே, அபகஹலந்த
கடுகன்னாவ ,யட்டிநுவர ,பன்விலை, கல்ஹின்னை, பூஜாப்பிட்டிய என அவ் அவ் பிரதேசங்களில் உள்ள இளைஞர்கள் மில்லியன் கணக்கில் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ரவூப் ஹக்கீம் மூலமாக கிடைத்த பொருட்களை கட்சி பேதமின்றி உண்மையான தேவையுடையவர்களென அடையாளம் காணப்பட்டவர்களுக்கு
வழங்குவதில் ஈடுபடும் படங்களை பகிர்ந்திருந்தனர்.
ஆனால் உலர் உணவுகள் வழங்கப்படும் ஒரு படத்தில்கூட ரவூப் ஹக்கீமை காணமுடிய வில்லை.
பதிலுக்கு பழைய படங்கள் சிலவற்றை இணைத்திருந்தார்கள்.

இன்று இந்த பதிவை இடும் வேளையில் ஆதாரத்திற்காக அவற்றை தேடியபோது பல பதிவுகள் அகற்றப்பட்டிருந்தன .
ஏனென்று சிலரிடம் கேட்டபோது ரவூப் ஹக்கீமின் வேண்டுகோள் என அறிய முடிந்தது.

கொரோனாவினால் இந்த நாடு  Lock Down ஆகிய ஆரம்ப நாட்களிலிருந்து ரவூப் ஹக்கீம் இயங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார். ஆனால் அவை எதுவும் வெளிச்சத்திற்கு வரவில்லை. காரணம் ரவூப் ஹக்கீமிடம் அரசியல் நோக்கம் இருக்கவில்லை. இதுவரை அரசல்புரசலாக கிடைத்த தகவல்களின் படி அட்டுலுகம தனிமைப்படுத்தலுக்கு உள்ளானபோது பெருந்தொகை மருந்து மற்றும் பொருட்கள் , அதனை அடுத்து அக்குறனை தொடர்சியாகவே தனிமைப்படுத்தப் பட்டபோது லொறி லோடுகளாக மாவும் , அரிசியும் என கடந்த மாதமே ரவூப் ஹக்கீம் தனது நிவாரண உதவிகளை ஆமை ஆயிரம் முட்டை இடுவது போல ஆரவாரங்கள் எதுவுமின்றி நடத்திக் கொண்டிருந்துள்ளார் என்பது தெரியவந்தது.

எவ்விதமான விளம்பரமும் இல்லாமல் மனிதநேயத்துடன் வெவ்வேறான உதவிகளை ரவூப் ஹக்கீம் செய்துள்ளார். அத்தோடு எல்லா உதவிகளையும் தகுதியான எல்லோருக்கும் கிடைக்கின்ற வகையில் பள்ளிவாயல் நிர்வாகங்களிடமே ஒப்படைத்துள்ளார். அரசியலுக்கப்பால் ரவூப் ஹக்கீமின் இந்தப்பணி போற்றுதலுக்குரியதே.
இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் ரவூப் ஹக்கீம் அவர்களது இந்த மனிதாபிமானப் பணி பல தோட்டப்புற தமிழ் மக்களுக்கும் , பெரும்பான்மை இன சிங்கள மக்களுக்கும் அந்த அந்த சமூகம் சார்ந்த பிரதிநிதிகள் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக பன்விலை, கம்பளை போன்ற பிரதேசங்களில் இருந்து தெரியவருகிறது.

ரவூப் ஹக்கீம் கிழக்கிற்கு உதவவில்லை, வடக்கிற்கு உதவவில்லை என்று சிலர் கூறிவருகின்றனர். ஆனால் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கமையவே கிழக்கில் SLMC பிரமுகர்களால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன என்று வழங்குபவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தலை குறிவைத்து வாக்கு வியாபாரம் செய்கிறார்கள் என பல விதமான விமர்சனங்கள் இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே பரந்த அளவில் , சிறந்த முறையில் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
ரவூப் ஹக்கீம் வழங்கி வரும் நிவாரண பொருட்களின் பெறுமதி கண்டியில் மாத்திரம் இதுவரை இரண்டு கோடி ரூபாய்களை தாண்டி இருப்பதை ஆதாரங்களோடு ஒருவர் அட்டவணை படுத்திய பதிவொன்றையும் முகநூலில் கண்ணுற்றேன்.

அத்தோடு ரவூப் ஹக்கீம் இரண்டு மாதங்களுக்கு முன்செய்த பணிகள் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளன . இன்னும் எங்கெல்லாம் அவரது இரகசியமான நிவாரண உதவிகள் சென்றுள்ளன என்று யாருக்கு தெரியும் ?

( தற்போது கிடைத்த மற்றொரு தகவல் : கண்டி சிறைச்சாலைக்கு விஜயம் செய்த ஹக்கீம் அங்குள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பு பிடிக்கவும், திறக்கவும் ஏற்பாடுகளை செய்துவிட்டு வந்துள்ளார். )
அலைவரிசைகள் தண்டோரா போட்டு பறையடித்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் இவ்வாறு மறைமுகமாக தான் செய்த தர்மங்களை பகிரங்கப்படுத்துவதை ரவூப் ஹக்கீம் விரும்பாத போதும் ,சிலரின் தவறான விமர்சனங்களினால் உண்மையை அறியாத மக்கள் தவறிலைத்து, அதற்கான பாவத்தை இந்த புனிதமான மாதத்தில் சுமக்கவேண்டி வரும் என்பதால்தான் இவ் விடயத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறேன்
இனியும் யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. இறைவன் ரவூப் ஹக்கீமின் இரகசியமான உயர்ந்த பணிக்கு நற்கூலியை வழங்க போதுமானவன். இறைவன் அன்னாரின் தூய எண்ணத்தை அங்கீகரித்து, நிறைவான கூலியை வழங்குவனாக.. ஆமீன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -