நிந்தவூரில் வீதியையும் தாண்டி கடல் நீர் குடியிருப்பு பகுதிக்குள் பரவியதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்வு..!

எம்.ஐ.எம்.அஸ்ஹர், எம்.எம்.ஜெஸ்மின்-

நிந்தவுர் கடல் பிரதேசத்தில் இன்றிரவு( ஞாயிறு ) 10 மணியளவில் கடல் நீர் கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது.
இதனால் பீதியடைந்த பிரதேச மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றனர். மீனவர்கள் தமது மீன்பிடி படகுகளையும் , தோணிகளையும் ஏனைய தமது உடமைகளையும் கரையை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதில் பயங்கரமான கடலலைகளுக்கு மத்தியில் செயற்பட்டனர்.

கடந்த சில தினங்களாக கடலுக்கு மீன்பிடிக்க எவரும் செல்ல வேண்டாம் .பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வானிலை அவதான நிலையம் அறிவித்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில தினங்களாக கடற்கரையோரத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் பகலிலும் இரவிலும் மிகவும் அவதான இருப்பதுடன் , இரவு வேளைகளில் நித்திரையின்றியும் இருந்துள்ளனர். இதே வேளையில் மீனவர்கள் தொழிலின்றி தமது லருமானத்தை இழந்தவர்களாக தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்வதில் மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -