முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு..இருவர் கைது.



நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-
ட்டனில் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு சீ.சீ டீவி காணொளியின் உதவியுடன் இருவர் கைது...

அட்டனில் முச்சக்கரவண்டி தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கும் இருவரை சீ.சீ டிவி கமராவின் காணொளி உதவியுடன் கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

அட்டன் பிரதான பஸ் தரிப்பு நிவையத்தின் பின் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கரவண்டியே 11/05 அதிகாலை 04 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதியிலுள்ள சி.சி டீவி கமராவின் காணொளி பதிவினை வைத்து இருவரை சந்தேகத்தின் பேரில் 12/05 அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸாரினால் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த முச்சக்கரவண்டியிலிருந்து அவசர தேவைக்காக பெற்றோல் களவாடியதாகவும் அதன் பின்னர் பெற்றோர் தாங்கியினை சரிசெய்ய தீ குச்சியினை பற்றவைத்து ஒளியினை பெற்ற போதே முச்சக்கரவண்டி தீ பற்றிய நிலையில் தப்பி ஓடியதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -