வாழைச்சேனையில் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது!


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 09.00 மணியளவில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து குறித்த போதைப்பொருள் வியாபாரியை வாழைச்சேனை கோழிக்கடை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஊரடங்கு தளர்வு நிலையில் பிரதேசத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் 3360 மில்லி கிராம் கஞ்சாவுடன் வியாபாரி கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த போதைப்பொருள் வியாபாரி இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை அனுபவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -