ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (திங்கள்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் துசிதகுமார மற்றும் பொலிஸ் சார்ஜன் எம்.பி.எம்.தாஹா ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 1160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்போது ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து 580 மில்லிகிராம் போதைப் பொருளும், பிறைந்துரைச்சேனை பகுதியில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து 540 மில்லிகிராம் போதைப் பொருளும், வாழைச்சேனை பகுதியில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 40 மில்லிகிராமுமாக மொத்தம் 1160 மில்லிகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -