தமிழ்த்தேசியப்பற்றாளர் திராவிடத்தம்பியின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பு!


கட்சிக்கொடியைப்போர்த்தி அஞ்சலிஉரையாற்றிய தவிசாளர் ஜெயசிறில்.
காரைதீவு நிருபர் சகா-
ழம்பெரும் தமிழ்த்தேசியப்பற்றாளர் 'திராவிடத்தம்பி' என செல்லமாக அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி ஜயாவின் இழப்பு தமிழ்கூறுநல்லுலகிற்கு பேரிழப்பாகும்.

அம்பாறை மாவட்டத்தின் மல்வத்தையில் தமிழ்த்தேசியத்தின் கொள்கைவாதியாக வாழ்ந்து நேற்றுமுன்தினம் தனது 81ஆவது வயதில் மரணித்த 'திராவிடத்தம்பி' என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை சின்னத்தம்பியின் பூதவுடலுக்கு உத்தியோகபூர்வமாக தமிழரசுக்கட்சிக்கொடியைப்போர்த்தி அஞ்சலிஉரையாற்றிய தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

அன்னாரது மறைவுச்செய்தி கேட்டவுடன் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உடனடியாக தொலைபேசி மூலம் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் கே.ஜெயசிறிலைத் தொடர்புகொண்டு கட்சி சார்பாகக்கலந்துகொண்டு கட்சிக்கொடியைப்போர்த்தி தமது அனுதாபங்களைத் தெரிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டிருந்தார். கட்சி சார்பாக குடும்பத்தினருக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டது.

இறுதிக்கிரியைகள் அஞ்சலி உரைகள் நேற்றுமாலை மல்வத்தை பொதுமயானத்தில் எளிமையாக நடைபெற்றன.

அவர் மேலும் அஞ்சலி உரையாற்றுகையில்:

எமது கட்சியின் அம்பாறை மாவட்ட முதுபெரும் தூண் இன்று சரிந்துள்ளது. அவரது கொள்கையின்பாலான வெறித்தனம் இன்றும் இளம் சந்ததியினருக்கு முன்னுதாரணமாகவிருக்கும். அவரது ஊனுடம்பு அழிந்தாலும் புகழுடம்பு அழியாது. அவர் என்றும் தமிழ்மக்கள் மத்தியில் சிரஞ்சீவியாக எம்முடன் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.

தந்தை செல்வா காலத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு கொள்கைப்பிடிப்புடன் அரும்பணியாற்றியவர் அமரத்துவமடைந்த வேலுப்பிள்ளை சின்னத்தம்பி ஐயா.

தமிழ் மக்களின் விடிவுக்காக தந்தை செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். தந்தையின் பாசறையில் தந்தையோடு கூடவே வாழ்ந்து அம்பாறையில் ஒரிஜினல் தமிழரசுக் காரனாக வாழ்ந்தவர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி. – அஹிம்சை ரீதியில் தந்தை செல்வநாயகம் அவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தபோது அவரோடு கூடவே போராட்டத்தில் பங்குகொண்டு எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்கள்.

அவர் தமது 07 பிள்ளைகளுக்கும் வைத்துள்ள பெயர்கள் தமிழ்செல்வி, கலைச்செல்வி, மணிமேகலை, இனியபாரதி, அண்ணாதுரை, கண்ணதாசன், அகிலன் அவரது தமிழ்ப்பற்றுக்கு சாட்சியமாக விளங்குகின்றன. என்றார்.

அமரரின் இறுதி நிகழ்வில் முன்னாள் எம்.பி.க.கோடீஸ்வரன் ,கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் த. கலையரசன் , கதிர்.பிரகாஸ் ஆகியோர் அஞ்சலியுரை ஆற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -