பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் சாட் கட்டாக் கிழக்கு மாகாண ஆளுனருடன் சந்தித்து பேச்சு.


எப்.முபாரக்-
பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் சாட் கட்டாக் இன்று (28)கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் இன்று (28) சந்தித்தார்.

சந்திப்பின் இறுதியில் செய்தியாளர்களுக்கு தமது விஜயம் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

கொரோனா பேரிடர் இலங்கையை தாக்குவதற்கு முன்னர் தாம் இலங்கைக்கு வந்ததாகவும் அதன் பின்னர் குறித்த பேரிடர் காரணமாக தமக்கு பாகிஸ்தானிற்கு திரும்பவும் செல்லமுடியாதனிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்த உயர்ஸ்தானிகர் தாம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் தனது கதையை ஒரு புத்தகமாக எழுத ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நல்லதோர் புரிந்துனர்வு இடம்பெற்றுவரும் இந்நிலையில் தமது கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் ஊடாக மாகாணத்தில் உள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தாம் உதவுவதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்
கிழக்கு மாகாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளை கட்டியெழுப்புவது தொடர்பாகவும், கல்வி சம்பந்தமான புலமைப்பரிசில் திட்டங்கள் சம்பந்தமாகவும், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவது தொடர்பிலும் குறிப்பாக சமயம் சார்ந்த சுற்றுலாத்துறையின் விருத்தி தொடர்பாகவும் இவ் சந்திப்பின்போது தாம் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -