கிண்ணியா பிரதேசத்தில் சுவர் விழுந்து நான்கு வயது சிறுவனொருவன் மரணம்


எம்.ஏ.முகமட்-
கிண்ணியா பொலிஸ் பிரிவிக்குட் பட்ட பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயதுச் சிறுவனொருவன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கிண்ணியா, மாஞ்சோலையைச் சேர்ந்த ரனீஸ் சான் ஹனி எனும் சிறுவனே மரணமடைத்துள்ளதாக தெரிய வருகின்றது.

இச் சம்பவத்தில் காயமடைந்துள்ள அவரின் சகோதரர் இரண்டு வயதுச் சிறுவன் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் மரணம் தொடர்பில், கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி குப்பைத்தம்பி நெஹ்மத்துல்லா சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்..

இக் சம்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,குறித்த வீடொன்றின் அருகாமையில் உள்ள வீடொன்று பழைய நிலையில் காணப்பட்டுள்ளது. சிறுவன் அதன் அருகில் விளையாடிக் கொண்டிருக்கையில், இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.

இச் சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -