சுயதனிமைப்படுத்தலுக்குட்பட்ட இளம்குடும்பஸ்தர் தற்கொலை!


காரைதீவு  சகா-

சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலைசெய்துள்ளார்.
இச்சம்பவம் திருக்கோவில் பிரதேசத்துக்குட்பட்ட வினாயகபுரம் என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் (9) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

பழையதபாலக வீதி வினாயகபுரம் 2 ஜச் சேர்ந்த கோபாலபிள்ளை சிறிகரன்(வயது32) என்பவரே இவ்விதம் தற்கொலைசெய்துள்ளவராவார்.
13வயதுடைய பெண்பிள்ளையையும் 10வயது ஆண்பிள்ளையையும் மனைவியையும் தவிக்கவிட்டுச்சென்ற அவர் சவூதியில் வேலைசெய்தவராவார்.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி கொரொன நெருக்கடி காரணமாக இலங்கை வந்து ஊருக்கு வந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

பின்பு அதிலிருந்து விடுதலையாகி சுதந்திரமாக வாழ்ந்துவந்தவேளையில் போதையில் குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டதனால் விரக்தி காரணமாக நேற்று நள்ளிரவில் குளியலறையில் தூக்கில் தொங்கி தற்கொலைசெய்துள்ளார் என பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -