திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவிற்குட்பட்ட பேக்கறி உரிமையாளர் மற்றும் பேக்கறி உற்பத்தி பொருட்களை விற்போருக்கான அறிவுறுத்தற்கூட்டம், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் 10-05-2020 காலை 11 மணிக்கு இடம்பெற்றது.
இதன் போது எதிர் வரும் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப் படும் போது எவ்வாறு சுகாதார முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ருத்ரா மற்றும் பொது சுகாதார அதிகாரிகளினால் விளக்கமான அறிவுரை வழங்கப் பட்ட்து