வானொலி அறிவிப்பாளராக மாறிய மைத்திரி: செய்தியும் வாசித்தார்!


ஜே.எப்.காமிலா பேகம்-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தனியார் சிங்கள வானொலி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகவும், அதேபோல அறிவிப்பாளராகவும் செயலாற்றி தனது கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
சமூக ஊடகங்களில் இந்த காணொளியும், குரல் பதிவுகளும் தற்போது வைரலாகப் பரவிவருகின்றது.
கொழும்பிலுள்ள தனியார் வானொலியில் இன்று காலை செய்தி வாசிப்பாளர் ஆசனத்தில் அமர்ந்து செய்திகளை வாசித்த அவர், அதன் பின்னர் அறிப்பாளராகவும் வானொலியும் நானும் என்கிற தலைப்பில் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.
அண்மைக்காலமாக மைத்திரி மீது கடும் அதிருப்திகளும், கண்டனங்களும் சமூக ஊடகங்களில் வலுத்துவந்த நிலையில், இன்றுகாலை முதல் மைத்திரி குறித்த சிறந்த விடயங்களே அவற்றில் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -