கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு நீங்கும்..

ஜே.எப்.காமிலா பேகம்-

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய அபாய வலய மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த மாவட்டங்களில் தினமும் இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் பேச்சு நடத்தப்பட்டிருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 23 நாட்களாக நாட்டில் சமூகத்தினிடையே கொரோனா நோயாளர்கள் இனங்காணப்படவில்லை.

இருப்பினும் கம்பஹா – வெலிசற கடற்படை முகாமிலிருந்த சிப்பாய்களும், அதேபோல வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களுகே தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -