” உற்சாக அறுவடை ” என்ற பெயரில் பயிரிடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கையின் உட்சாகமான பெண்கள் நாட்டின் பொருளாதாரத்தின் பங்குதாரராவதற்கு தமது இல்ல பொருளாதாரத்தின் செயற்பாட்டில் அங்கத்தவராக்கும் ” உற்சாக அறுவடை ” என்ற பெயரில் வீட்டுத் தோட்டத்தில் தமக்கு தேவையான மரக்கறிகளையும் , பலன் தரும் மரங்களையும் பயிரிடும் ஊக்குவிக்கும் திட்டம் அண்மையில் முன்னாள் அமைச்சரும் தயா குறூப் நிறுவனத்தின் தலைவருமான தயா கமகே மற்றும் முன்னாள் பெற்றோலிய வள பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோரால் அம்பாறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
100 மில்லியன் பயிர் கன்றுகள் வீட்டுத் தோட்டத்தில் புதிதாக சேர்த்தக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட பெண்களுக்கு 10 வகை மரக்கறி விதைப் பொதிகள் இவர்களால் அண்மையில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -