எஸ்.எம்.எம்.முர்ஷித்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் நாகவத்தை மற்றும் தேவபுரம் போன்ற கிராமங்களிலுள்ள கரைவலை தொழில் புரியும் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு குறித்த பிரதேசங்களுக்கு நேரடி விஜயமொன்றினை வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது குறித்த மீனவர்களுடன் வாழ்வாதார விடயம் மற்றும் மீனவர்கள் ஊரடங்கு சட்ட நேரங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
அத்தோடு மீனவர்கள் தங்களது மீன்களை கிராமங்களில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கான அனுமதியினை பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டதுடன், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பிரான்ஸ் நாட்டு புழோமினில் தமிழ் சங்கத்தின் ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள்;; வழங்கி வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டு புழோமினில் தமிழ் சங்கத்தின் பிரதேச இணைப்பாளர் வை.மங்களதர்சனிடம் பிரதேச செயலாளர் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மேற்படி நாகவத்தை மற்றும் தேவபுரம் கிராம மீனவ குடும்பங்களுக்கும் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.