கொரோனா நோயாளிகள் மக்கள் மத்தியில் உலாவுகின்றனர்- மக்கள் மிக அவதானம் எச்சரிக்கிறார் - சுகாதார அமைச்சர்

மூகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகளை வெளிக்காட்டாத நோயாளர்களிடம் இருந்து வைரஸ் பரவும் சூழல் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் அனைவரும் சமூக இடைவெளியை பேண வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.

இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 50 வீதமானோர் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னுமொருவருக்கு பரவக்கூடியது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

எனவே ஊரடங்குச் சட்டம் தளத்தப்பட்டாலும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -